search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணற்றில் விழுந்து பலி"

    • மதுபோதையில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே சித்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 45), விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நடராஜுக்கு வீட்டின் அருகே விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கிணறு ஒன்றும் அருகே உள்ளது.

    நடராஜிக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று நடராஜ் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது தனது விவசாய நிலத்தின் அருகே சென்ற போது கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் கிணற்றில் விழுந்த நட்ராஜை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×